Posts

Showing posts from January, 2018

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

கவியரங்கக் கவிதை தொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை என் முதலாகக் கொண்டதால் என் வாழ்க்கை வணிகத்தில் இழப்பே இல்லை தாள் கண்டால் குனிந்து தலை வணங்கும் பேனா உன் தாள் பணியும் உபதேசம் பெற்ற பின்னர் எழுத்தல்ல இறைவா இவையெல்லாம் என் எழுதுகோல் செய்த ‘சஜ்தாவின்’ சுவடுகள் (சஜ்தா – சிரம் பணிதல்) உன் பெயரில் ஊற்றெடுத்து ஓடுகிறேன் நதியாக கலப்புக்கும் நீயே கடலாகி நில் எண்ணுவது உன்னையே எழுதுவது உன்னையே உண்ணுவது உன்னையே உயிர்ப்பதும் உன்னையே என்னை உன் கையில் எழுதுகோலாய் ஏந்தி நின்னையே நீ எழுதிக்கொள் நாமோ பாவலர் உமரின் பரம்பரையில் வந்தவர்கள் சேகுனாப் புலவரின் செல்லக் குழந்தைகள் பீரப்பாவின் பேரப்பிள்ளைகள் காசிம் புலவரின் கால்வழித் தோன்றல்கள் வண்ணக் களஞ்சிய வாரிசானவர் குலாம் காதிரின் குலக் கொழுந்துகள் செய்குத் தம்பியின் சின்னத் தம்பிகள் ரகுமான் என்றால் இது என்ன ரக மான் என்பார் பொய்மான் பின்னால் போனவன் அல்ல நான் ‘ஈமான்’ பின்னால் ஏகும் ரகுமான் இதுவரை ஒட்டடை அடிக்கக் கோல் ஏந்தினோம் இன்றோ நான் ஓர் ஒட்டடையை புகழக் கோல் ஏந்தினேன் அன்றொரு நாள்

கவிஞர் வாலி கவிதைகள்

என் அம்மாவிற்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்து எத்தனை சொந்தம் என் வாழ்வில்  வந்தாலும் அம்மா  உன் ஒற்றை பார்வையின் பந்தம்  எதுவும் தந்ததில்லை  உன் கண்ணீரை எல்லாம் சிரிப்பில்  மறைத்தாய் அம்மா  இத்தனைநாளும் அது எனக்கு  விளங்கியதில்லை  நான் வளரும் ஒவ்வொரு நொடியும்  உனக்கு பாரம் தான்  தெரிந்தும் சுமக்கிறாய்  பத்து மாதம் வரை அல்ல  உன் ஆயுள் காலம் வரை  உன் காலம் நரைக்கும் நேரத்தில் என் நேரம் உனக்காய்  இருக்க போவதில்லை  தெரிந்தும்  காக்கிறாய் உன்  இமைக்குள் வைத்து என்னை  கடமைக்காக அல்ல  கடனுக்காக அல்ல  கடவுளாக  உன் வாழ்வின் ஒரு பாதி  உன் பெற்றோருக்காய்  மறு பாதி உன் பிள்ளைகளுக்காய்  மனதார பகிர்ந்தளித்து விட்டாய்  என்றாவது உனக்காய் வாழும்  உத்தேசம் உண்டா  உன் அன்னைக்கு என்ன கைமாறு  செய்தாலும் உன்னை எனக்கு  தந்ததிற்கு ஈடாய்  ஒன்றும் செய்ய இல்லாமல்  முடமாய் நிற்கிறேன்  ஏழு ஜென்மங்களில் நம்பிக்கை இல்லை  இனி ஒரு ஜென்மம்  இருந்து உயிரினமாய் பிறந்தால்  உன்னை எந்தன் மகளாக்கும் பாக்கியம்  மட்டும் போதும்  ஒரே ஒரு வேண்டுகோள் உன்னிடம்  இன்று மட்டுமாவது  உனக்காய் வாழ முயற்சி செய்  என் இனிய பிறந்தநாள் வாழ

கவிஞர் வாலி கவிதை

கவிஞர் வாலி கவிதை தமிழுக்கு அமுதென்று பேர்’ என்று பாடிய, பாவேந்தர் பாரதிதாசன் தமது குருவாகிய பாரதியாரையே கவிதையில் மிஞ்ச வேண்டும் என்று அகத்தில் ஆசை வைத்தாலும், குருவை மிஞ்சும் அளவிற்கு முகத்தில் மீசை வைக்க வில்லை’ என்று அவர் குறிப்பிட்டார். இதோ அந்தக் கவிதை :- தமிழுக்கு அமுதென்று பேர்! அடடா! இந்த ஒரு வாசகம்- இணையற்ற பெருவாசகம்; இது- இங்குள தமிழர்க்கெல்லாம் இன்னுமொரு திருவாசகம்! இந்தத்- திருவாசகத்தை அருளிய தீந்தமிழ்க் கவிஞன்... பெருமாளைப் பாடிய- நாயன்மாரில் ஒருவனல்ல; பெரியாரைப் பாடிய- நேயன்மாரில் ஒருவன்! யாத்த கவிதைகள் யாவையும்... மாணிக்கம் மாணிக்கமாய் யாத்ததால்-இவன் மற்றொரு மாணிக்க வசகனே! ஆனால் ஒன்று; இவனால்... பரி நரியாகவில்லை; நரி பரியாகவில்லை; இவனால்... வரி எரியாகியது; எரி வரியாகியது; -அவ் வரியில்- எரியில்- கண்மூடித் தனமெல்லாம் காய்ந்து கரியாகியது! இவன் இருந்தமிழர் இருள் ஈக்கப்- புதுவையில் உதித்த புது வெயில்; இவன்- நோவப் பிறந்தவரல்ல தமிழரென்று கூவப் பிறந்த பூங்குயில்! கொட்டோ கொட்டென்று கொட்டினான் கவிப்பறை; அதில் கந

துன்பத்தை மறந்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?

துன்பத்தை மறந்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி? மருத்துவமனையில் நடந்த நிகழ்வு.! ஒரு பெரிய மருத்துவமனையில் பல படுக்கையறைகள் இருந்தது. அவற்றில் ஒரு அறையில் இரண்டு நோயாளிகள் இருந்தனர். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவர் ஒன்று இருந்தது. ஒருவர் படுத்திருக்கும் படுக்கை ஜன்னல் அருகில் இருந்தது. இன்னொருவருக்கு ஜன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர அங்கு அவர் தனிமையாகவே இருந்தார். ஜன்னல் அருகே இருக்கும் நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் அவர்களுக்கிடையே நட்பு மலர்ந்தது. ஒருமுறை எலும்பு முறிவு நோயாளி ஜன்னல் நோயாளியிடம் உனக்காவது பொழுது போக்க, ஒரு ஜன்னல் இருக்கிறது எனக்கு அதுகூட இல்லை..! என்று கூறினார். அதற்கு ஜன்னல் அருகே இருப்பவர் கவலைப்படாதே நண்பா..! நான் ஜன்னல் வழியாக பார்த்து என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைபிடிப்பேன்..! என்று கூறினார். அன்று முதல் ஜன்னல் அருகே இருக்கும் நோயாளி, தான் கண்ட காட்சிகளை அனைத்தும் தன் நண்பனுக்க