என் அம்மாவிற்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்து எத்தனை சொந்தம் என் வாழ்வில் வந்தாலும் அம்மா உன் ஒற்றை பார்வையின் பந்தம் எதுவும் தந்ததில்லை உன் கண்ணீரை எல்லாம் சிரிப்பில் மறைத்தாய் அம்மா இத்தனைநாளும் அது எனக்கு விளங்கியதில்லை நான் வளரும் ஒவ்வொரு நொடியும் உனக்கு பாரம் தான் தெரிந்தும் சுமக்கிறாய் பத்து மாதம் வரை அல்ல உன் ஆயுள் காலம் வரை உன் காலம் நரைக்கும் நேரத்தில் என் நேரம் உனக்காய் இருக்க போவதில்லை தெரிந்தும் காக்கிறாய் உன் இமைக்குள் வைத்து என்னை கடமைக்காக அல்ல கடனுக்காக அல்ல கடவுளாக உன் வாழ்வின் ஒரு பாதி உன் பெற்றோருக்காய் மறு பாதி உன் பிள்ளைகளுக்காய் மனதார பகிர்ந்தளித்து விட்டாய் என்றாவது உனக்காய் வாழும் உத்தேசம் உண்டா உன் அன்னைக்கு என்ன கைமாறு செய்தாலும் உன்னை எனக்கு தந்ததிற்கு ஈடாய் ஒன்றும் செய்ய இல்லாமல் முடமாய் நிற்கிறேன் ஏழு ஜென்மங்களில் நம்பிக்கை இல்லை இனி ஒரு ஜென்மம் இருந்து உ...
Comments
Post a Comment