Posts

Showing posts from December, 2017

our college function

Today our college celebrated Christmas  and newyear function. we are all enjoyed this program 

மார்கழி மாதம் ஏன் பெண்களுக்கு ஸ்பெஷல்..?

Image
மார்கழி மாதம் ஏன் பெண்களுக்கு ஸ்பெஷல்..?  நம் முன்னோர்கள் ஆடியில் அம்மனுக்கும், புரட்டாசியில் பெருமாளுக்கும், மார்கழியில் அனைத்து தெய்வங்களும் என, மாதத்திற்கு ஒரு தெய்வத்தை வழிபாடு செய்து மார்கழி மாதம் ஏன் பெண்களுக்கு ஸ்பெஷல்..?  நம் முன்னோர்கள் ஆடியில் அம்மனுக்கும், புரட்டாசியில் பெருமாளுக்கும், மார்கழியில் அனைத்து தெய்வங்களும் என, மாதத்திற்கு ஒரு தெய்வத்தை வழிபாடு செய்து வந்துள்ளனர். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு உள்ளது போல மார்கழி மாதத்திற்கும் தனி சிறப்பு உள்ளது. எல்லா விரதங்களிலும் பெண்கள் முன்னிலைப்படுத்துவதற்கான காரணம் :  பெண்களை 6 விதமான தன்மைகளைக் கொண்டவள் என்று கருதுகின்றனர். பெண் என்பவள் தெய்வமாகவும், மனைவியாகவும், குருவாகவும், நண்பனாகவும், ஆசானாகவும், போதகனாகவும் (செயல்திறன்) ஒரு ஆணுக்கு அமைகின்றாள்.  அந்தப் பெண்ணின் ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தான் ஒவ்வொரு குடும்பமும் ஆரோக்கியமாக இருக்கும். ஆகவேதான் பெரும்பாலான விரதங்களில் பெண்களின் பங்கு அதிகம் உள்ளது.  எந்த ஒரு மனிதரும் தவறுகள் செய்யாமல் இருப்பதில்லை. அறிந்து செய்யும் தவறுகள், அறியாமல் செய்யும் தவறுகள் எ

திருச்செந்தூர் முருகன் கோவில் பற்றி யாருக்கும் தெரியாத ஓர் ரகசியம்!!

Image
திருச்செந்தூர் முருகன் கோவில் பற்றி யாருக்கும் தெரியாத ஓர் ரகசியம்!! கடல் நீரை இனிப்பாக மாற்றும் அதிசய கோவில் கிணறு!!    அறுபடை வீடுகள் எனப்படும் முருகப்பெருமானின் சிறப்புக்குரிய கோவில்கள் தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை என ஆறு ஊர்களில் அமைந்திருக்கின்றன. இவ்வாறு கோவில்களில் ஐந்து கோவில்கள் மலை மீது அமைந்திருக்க திருச்செந்தூர் மட்டும் கடற்கரையை ஒட்டி அமைந்து சிறப்பை பெற்றுள்ளது.   திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சென்னையில் இருந்து 600கி.மீ தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடாவை ஒட்டியா கடற்கரையில் அமைந்துள்ளது.  இக்கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது. இவ்விடம் முன்னர் திருச்சீரலைவாய் என்றழைக்கப்பட்டது.  இது போன்ற பல சிறப்புகளை பெற்ற இந்த கோவிலில் பலரையும் அதிசயத்தில் ஆழ்த்தும் ஒரு கிணறு உள்ளது. அது தான் நாழிக்கிணறு.  என்ன சிறப்பு?  கடற்கரைக்கு மிக அருகாமையில் இந்த கிணறு இருந்தாலும், இதில் உள்ள நீரில் உப்பு கரிப்பதில்லை. அதற்கு மாறாக இந்த நீர் இனிக்கிறது. அறிவியல் காரணமா?  இதன் பின்பு அறிவியல்

பெற்றோர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது

பெற்றோர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது இதுதானா ? 23 முறை கேட்ட கேள்வி..! ஒரு வசதியான வீட்டின் வரவேற்பறைக்கு முன்பு 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஜன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவருடன் அவரது மனைவியும் அமர்ந்து திருமுறையை ஓதிக் கொண்டிருந்தார். அவர்களுக்கு 45 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவரும் அவர்கள் கூடவே அமர்ந்து லேப்-டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த சமயம் திடீரென ஒரு காகம் முதியவரின் அருகில் இருந்த ஜன்னலில் வந்து அமர்ந்தது. அப்போது அந்த முதியவர் தன் மகனிடம்! என்ன இது?.. என்று கேட்டார். அங்கு லேப்-டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த அவரது மகன், அது ஒரு காகம்! என்று கூறினார். சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும்! என்ன இது? என்று கேட்டார். அதற்கு மகன் இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம் என்று கூறினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் மூன்றாவது முறையாக அந்த முதியவர் தன் மகனிடம்! என்ன இது? என்று கேட்டார். சற்று எரிச்சலான குரலில் மகன்! அது ஒரு காகம், காகம்! என்று பதிலளித்தார். இன்னும் சிறிது நேரம் கழித்து மீண்டும் அவனது தந்தை நான்காவது மு

கவலைப்படாதீர்கள் நடப்பது எல்லாம் நன்மைக்கே..!

கவலைப்படாதீர்கள் நடப்பது எல்லாம் நன்மைக்கே..! பல்லவ நாட்டை இராஜவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அந்நாட்டு அமைச்சர் எப்பொழுதும் எது நடந்தாலும் வருத்தப்படாமல் எல்லாம் நன்மைக்கே! என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் அரசரும், அமைச்சரும் பேசிக் கொண்டிருந்தபொழுது அரசன் மாம்பழம் ஒன்றைக் கத்தியால் வெட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது தவறுதலாகக் கத்தி அரசனின் சுண்டு விரலை அறுத்துவிட்டது. வலி தாங்க முடியாமல் அரசன் துடித்தான். அந்தசமயம் வழக்கம்போல் அமைச்சர், அரசே! எல்லாம் நன்மைக்கே! என்றார். இதைக் கேட்ட அரசன் நான் விரல் வெட்டுப்பட்டுத் துடிக்கிறேன். நீர் எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிறாயா? என்று கோபத்துடன் கத்தினார். உடனே, காவலர்களிடம்! அமைச்சரை சிறையில் கொண்டு போய் அடையுங்கள் என்று உத்தரவிட்டார். காவலர்களும் அமைச்சரை சிறையில் அடைத்தனர். அப்போதும் அமைச்சர், எல்லாம் நன்மைக்கே! என்று கூறினார். நாட்கள் பல கடந்து சென்றது. வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் ஒரு நாள் தனியாகக் காட்டிற்குச் சென்றார். அப்போது அங்கே மலைவாசிகள் காளிக்குப் பலி கொடுப்பதற்காக ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தனர். அ

சாதத்தை இப்படி சாப்பிட்டால் தான் நோய்கள் வராது !

சாதத்தை இப்படி சாப்பிட்டால் தான் நோய்கள் வராது ! சாதம் எப்படி சாப்பிட வேண்டும்? தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வருவதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் அது தவறு. நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். சர்க்கரை நோய் எப்படி வருகிறது ? இன்று குக்கரில் வேகவைத்த சாதத்தை பலரும் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது. கஞ்சியின் பயன்கள் : சாதம் வடித்த கஞ்சி சு+டாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை சரியாகும். ஆனால் கஞ்சியை ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும். சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும். சாதத்தை எப்பொழுது சாப்பிட வேண்டும்? கொதிக்கக் கொதிக்க சாதத்தை சாப்பிடக்கூடாது. சாதத்தை மிதமான சு+ட்டிலேயே சாப்பிட வேண்டும். ஆனால் சாதத்தை சில்லென்று, ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும். பழையச் சோறு : பழையச் சோறு சாப்பிட்டுத்தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள். சாதத

இணையத்தின் விளைவுகள்

இணையத்தின் விளைவுகள் இணையம் என்பது உலக அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பான பெரும் வலையமைப்பைக் குறிப்பதாகும். இந்த இணையம் மனிதர்களின் உற்றத் தோழனாக மாறிவிட்டதை யாராலும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. இந்நவீன உலகில் பாலமாய் இருப்பது இணையமே ஆகும் என்றால் மிகையாகாது. அந்த இணையத்தின் ஆணிவேராக இயங்கும் பெரும்பாலான அடிப்படைத் தொழில்நுட்பங்களைப் புழங்குவது பற்றி இங்கு குறிப்பிட வேண்டும்.  மின்னஞ்சல் (email), வலைத்தளங்கள் (web pages), வலைப்பூக்கள் (blogs), தேடுபொறிகள் (search engines), வலைக்கூடங்கள் அல்லது சமூக வலைத்தளங்கள் (socical network such as Twitter, Facebook, LinkedIn), வலைத்திரைகள் (video sharing services such as You-Tube), மின்னாட்சி (e-governance), மின்வணிகம் (e-Commerce), வலையூடகங்கள் ( web versions of electronic media), மின் தரவுத்தளங்கள் (online encycopedia such as wikipedia), மின்கலைக்கூடங்கள் (electronic art galleries), இணையக் கல்விக்கூடங்கள் (web based learning, e-learning) என்பவை இவற்றில் அடங்கும்.  ஆக கல்வி, தொழிற்துறை, விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொ

சிரிப்பு vairamuthu kavitai

சிரிப்பு வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம் அது திறந்து கொள்கிறது வாழ்வின்மீது இயற்கை தெளித்த வாசனைத் தைலம் சிரிப்பு எந்த உதடும் பேசத் தெரிந்த சர்வதேச மொழி சிரிப்பு உதடுகளின் தொழில்கள் ஆறு சிரித்தல் முத்தமிடல் உண்ணால் உறிஞ்சல் உச்சரித்தல் இசைத்தல் சிரிக்காத உதட்டுக்குப் பிற்சொன்ன ஐந்தும் இருந்தென்ன? தொலைந்தென்ன? தருவோன் பெறுவோன் இருவர்க்கும் இழப்பில்லாத அதிசய தானம்தானே சிரிப்பு சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே துன்பம் வெளியேறிவிடுகிறது ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும் இருதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது சிரித்துச் சிந்தும் கண்ணீரில் உப்புச் சுவை தெரிவதில்லை * * * * * முள்ளும் இதுவே ரோஜாவும் இதுவே சிரிப்பு இடம்மாறிய முரண்பாடுகளே இதிகாசங்கள் ஒருத்தி சிரிக்கக்கூடாத இடத்தில் சிரித்துத் தொலைத்தாள் அதுதான் பாரதம் ஒருத்தி சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிப்பைத் தொலைத்தாள் அதுதான் ராமாயணம் எந்தச் சிரிப்பும் மோசமாதில்லை பாம்பின் படம்கூட அழகுதானே? சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில் மரணம் உட்கார்வதேயில்லை பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம் மரணம் ஒவ்வொரு சாயங்காலமும் படுக்கைதட்

சார்லஸ் ராபர்ட் டார்வின்

Image
சார்லஸ் ராபர்ட் டார்வின் சார்லஸ் ராபர்ட் டார்வின்  (Charles Robert Darwin) ( பிப்ரவரி 12 ,  1809  -  ஏப்ரல் 19 ,  1882 ) ஓர் ஆங்கிலேய  இயற்கையியல்  அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின்  படிவளர்ச்சிக் கொள்கை [1]  ஓர் அடிப்படையான புரட்சிகரமான  அறிவியற் கொள்கை . இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில்  உயிரினங்களின் தோற்றம்  ( The Origin of Species ) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். [2] [3] இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் கடல் வழியே,  எச்எம்எஸ் பீகிள்  ( HMS Beagle ) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக  காலபாகசுத் தீவுகளுக்குச்  சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன.  மனித  இனம்  குரங்கு   இனத்தோடு  தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை. [4] இவரே மனிதன், குரங்கிலிருந்து பரிணமித்தவன், உலகில்  விலங்குகள்  மற்றும்  உயிரினங்களில்  வளர்ச்சி என்பது, '